#Breaking: மின் கட்டணக் கணக்கீடு விவகாரம்.. தமிழக மின்சாரத்துறை அறிவிப்பு.!!
TNEB latest announcement June 03 2020
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இல்லங்களுக்கு உள்ளாகினர். இந்த சூழ்நிலையில், ஐந்தாவது ஊரடங்கு தற்போது தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சார வாரியத்தால் 2 மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என்றும், ஊரடங்கு காரணமாக 4 மாத மின் நுகர்வு இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது..
முந்தைய மாத யூனிட் கழிக்கப்படாமல், மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் கட்டணம் தொடர்பாக பல அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மின்சார வாரியம் இதனை அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
TNEB latest announcement June 03 2020