அடுத்த டார்கெட் சென்னைக்கு தான்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!!
tn weatherman says air pollution
தீபாவளியில் இருந்து டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனை அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு வரும் 8 ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டதுடன், காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் போன்ற அறிவுறுத்தல்களையும் டெல்லி அரசு கூறிவருகிறது.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை. இந்த முறை தமிழகத்திற்கு பாதிப்பு என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கிழக்கு கடற்கரை பகுதி வழியாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் பரவும். வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாக தமிழகத்தில் அடுத்தவாரம் காற்று மாசு அதிகரித்துக் காணப்படும் என்று பதிவு செய்துள்ளார்.
English Summary
tn weatherman says air pollution