வரும் 24 மணி நேரத்தில்., அந்த ஆறு மாவட்டங்கள்., பகிரங்க எச்சரிக்கை!
tn weather report oct 29
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில்,
"வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்
டிஜிபி அலுவலகம் 18 செ.மீ மழையும், அண்ணா பல்லை 14 செ.மீ மழையும், சென்னை நுங்கம்பாக்கம், புழல் தலா 13 செ.மீ மழையும், சூரன்குடி 11 செ.மீ மழையும், ராமேஸ்வரம் தலா 10 செ.மீ மழையும், அம்பத்தூர், பாம்பன் தலா 9 செ.மீ மழையும், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தலா 8 செ.மீ மழையும் பெய்துள்ளது." என்று அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.