#BREAKING || தமிழகத்தில் ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.. ஆனால்... சற்றுமுன் தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறப்பித்திருந்தார்.

அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கும் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று உடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், சற்று முன் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பின்படி, தமிழகத்தில் வரும் ஜனவரி 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

ஜனவரி 31 ஆம் தேதிவரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், ஜனவரி 31 ஆம் தேதிவரை அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. (மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்) 

மேலும், ஒன்று முதல் 9 வகுப்புவரை  ஜனவரி 31 ஆம் தேதிவரை அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றது. அதே சமயத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN LOCKDOWN TAMILNADU PONGAL 2022 school


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->