#சற்றுமுன்: ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்.. அரசு சார்பில் நிதிஉதவி - தமிழக அரசு.!!
TN Govt Withdrawn Sterlite Thoothukudi Protest Cases 21 May 2021
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22 2018 நாளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. மேலும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு நிவாரண தொகையாக தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படவுள்ளது.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கைப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் ஆகியவற்றையும் தமிழக அரசு வாபஸ் வாங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொது கைது செய்யப்பட்டு சீரியல் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவியும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி படிப்பனை உறுதி செய்யும் பொருட்டு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
TN Govt Withdrawn Sterlite Thoothukudi Protest Cases 21 May 2021