மே 11ம் தேதி முதல் இந்த பணிகளை தொடங்கலாம்.. தமிழக அரசு அனுமதி.!!
tn govt sanction for film production
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது.
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,035ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்புக்கு பிந்தைய டப்பிங், கிராபிக்ஸ் போன்ற பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 11ம் தேதி முதல் பணிகளை தொடங்கலாம் என அறிவித்துள்ளனர்.
பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அவசியம். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
tn govt sanction for film production