#Breaking | தமிழக அரசு இன்று அடுத்தடுத்து வெளியிட்ட அதிரடி அரசாணைகள்.!
tn govt order oct 11
கடந்த ஆட்சியில் நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அரசாணையில், "மனித - வனவிலங்கு மோதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.6 கோடியே 42 லட்சம் நிதியை ஒதுக்கப்படுகிறது" என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதேபோல் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றும் ஒரு அரசாணையில், நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகள் திரும்ப பெறுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.