இனி இப்படி எல்லாம் செய்யக்கூடாது.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை.!
tn government new go passed for chennai municipality
பேருந்து நிலையம், மருத்துவமனை, சாலை போன்ற பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுமக்கள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம் என தனி தனியே கட்டண முறையை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல பொது இடங்களில் குப்பையை கொட்டுவது, எச்சில் துப்புவது, ஏற்கனவே கொட்டியுள்ள குப்பையை எரித்தல், போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு வெளியியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 3 மாதத்தில் இந்த சட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்ததி விரிப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
tn government new go passed for chennai municipality