வடகிழக்கு பருவமழைக்கு தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்...எச்சரிக்கையுடன் தயாராகும் தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

அதிக மழை பெய்யக்கூடிய இடங்களை கண்டறிந்து கூடுதல் கவனம் செலுத்துவது, தூர்வாரும் பணிகளை முடுக்கி விடுவது மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கான பாதைகள் அமைக்கும் பணிகள் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government meeting for rainy season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->