மின்வாரிய ஊழியரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்.! காவல் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிப்பு.!
tn electrical board employee shutdown the police station power
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் அவ்வழியே சென்ற வாகனங்களை காவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி காவலர்கள் சோதனை செய்தபோது, சைமனிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
மேலும், மின்வாரிய ஊழியர் வந்த இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்த காரணத்தினால், வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, இது குறித்து மின்வாரிய ஊழியர் சைமன், உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் புகார் தெரிவித்தார். கோபாலசாமியின் உத்தரவிட்டதின் பேரில் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு வரும் மின்வயரை, மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் காவல் நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கு பிறகே மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளதை அடுத்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
tn electrical board employee shutdown the police station power