மொத்தம் 651 கோடி ரூபாய்., தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலை நடத்தி முடிக்க ரூ.621 கோடி செலவு ஆகும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தல்கள் அனைத்தும் ஒரே கட்டமாக தான் நடைபெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலை இரண்டு கட்டங்களாக டநடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தவோ, இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யவோ இல்லை" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கமளித்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாஹு, "தமிழக சட்டமன்ற  தேர்தலை நடத்த ரூ.621 கோடி செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  அந்தத் தொகையை மாநில அரசிடம் கேட்டுள்ளோம். கொரோனா நேரம் என்பதால், செலவீனம் அதிகரிக்கக் கூடும்.

தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை நடந்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.\


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN ELECTION 2021 Expense amount


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->