முக்கிய தலைவரை இழந்த அதிமுக! மருத்துவமனைக்கே விரைந்த முதல்வர் பழனிசாமி!
TN CM Palanisamy mourning to demise of purushothaman
விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி அதிமுக செயலாளர் புருசோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி மனவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளருமான புருஷோத்தமன்
நேற்று அவருடைய விவசாய நிலத்தில் விவசாய பணியினை செய்து கொண்டிருந்த போது, விஷ வண்டுகள் கடித்ததில் அகால மரணமடைந்தார்.
மறைந்த அவரின் உடல் ஆனது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது பூத உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான புருஷோத்தமனுக்கு முதல்வர் நேரில் வந்து மரியாதை செலுத்தியது உறவினர்களையும் கட்சியினரையும் நெகிழச் செய்தது. மேலும் சமூகவலைத்தளங்களிலும் புருஷோத்தமன் எளிமையான வாழ்க்கை குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
TN CM Palanisamy mourning to demise of purushothaman