நேற்று நடந்த சாலை விபத்தில் பறிபோன காவலர் உயிர்.! தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.!
tn cm mourning to ranipettei police man death
தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, "ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி காவல் நிலைய சரகம், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை, அரப்பாக்கம் அருகே அமைக்கப்பட்டிருந்த காவல் சோதனைச் சாவடியில், ஆற்காடு நகர் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் 6.12.2020 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இரும்பு தடுப்பு மீது மோதியது.
தடுப்பின் மறுபுறம் நின்றிருந்த காவலர் அய்யனமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பணியின் போது உயிரிழந்த காவலர் அய்யனமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தன் என்பவர் காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுளேன். பணியின் போது, உயிரிழந்த அய்யனமூர்த்தியின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்." என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
English Summary
tn cm mourning to ranipettei police man death