இராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு நிதிஉதவி மற்றும் அரசு வேலை அறிவிப்பு..!!
TN CM Announce job and 20 lakh relief fund for Army Officer Palani Family
இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தில், இந்திய இராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மூவரில் ஒருவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த பழனி என்ற செய்தி வெளியாகி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இரங்கல் அறிவித்த நிலையில், தமிழக முதல்வர் வீரமரணம் அடைந்த பழனிக்கு இரங்கல் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு ரூ.20 இலட்சம் நிதியுதவி வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்குவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில் மரியாதையை செய்யவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
TN CM Announce job and 20 lakh relief fund for Army Officer Palani Family