மு க ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைந்து உள்ளது. அதைத்தொடர்ந்து 15வது சட்டசபை நிறைவடைந்து, 16வது சட்டசபை அமைந்துள்ளது. 16வது சட்டசபையின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு கடந்த 9 ஆம் தேதி அறிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆகையால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சட்டசபை மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். 

காலை 10 மணிக்கு ஆளுநர் தனது உரையை நிகழ்த்துவார். ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தமிழில் வாசிப்பார். அதையடுத்து, நிகழ்ச்சிகள் முடிவடையும். அதன் பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில், சட்டப் பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். சட்டசபை எம்எல்ஏக்கள், அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் காரோண பரிசோதனை செய்து பிறகு தான் சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly meeting on june 21


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->