கெத்து தான் போங்க.! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்கள் செய்த சிறப்பான சம்பவம்.! வெளியான மகிழ்ச்சி செய்தி.!
tn 8 districts no case file for crackers
தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு அனுமதித்த 2 மணி நேரத்தில் மட்டும் மக்கள் பட்டாசு வெடித்து இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
தமிழகத்தில் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படவில்லை என்றாலும், நேற்றைய தீபாவளி பண்டிகையின் போது சுமார் 9 வீடுகள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் போது தீவிபத்துக்கு உள்ளாகின. இதில் யாருக்கும் உயிர் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 8 மாவட்டங்களில் ஒரு வழக்கும் பதிவாகவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், நெல்லை, கடலூர், விருதுநகர், அரியலூர் மாவட்டங்களில் இதுவரை வழக்குப்பதிவு இல்லை.
மேலும், திருப்பத்தூர், பெரம்பலூர், புதுக்கோட்டையிலும் பட்டாசு விதிமீறல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டாசு விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
English Summary
tn 8 districts no case file for crackers