முழு ஊரடங்கு வேண்டும்.. கோரிக்கை வைக்கும் மாவட்ட மக்கள்.!!
Tiruvannamalai youngster request to govt about implement amid
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடுமையான அளவு கொரோனா அதிகரித்ததால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் வீரியமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பல மாவட்டங்கள் மீண்டும் கொரோனா பாதிப்பை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது 1,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாவட்ட மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், 3 வயது, 4 வயது குழந்தைகள் மற்றும் 47 பெண்கள் உட்பட 137 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai youngster request to govt about implement amid