போக்ஸோ வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்தும் அடங்காத கொடுக்கு.. 11 வயது சிறுமிக்கு சோகம்.. பதறிப்போன கிராமத்தினர்.!
Tiruvannamalai Vandavasi Child Sexual Torture Case Culprit Arrest 27 April 2021
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு நேரத்தில் சிறுமி கிராமத்தில் நடந்த தெருக்கூத்து நிகழ்வை பார்க்க சென்றுள்ளார்.
பின்னர், வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த வேளையில், அருங்குணம் கிராமத்தை சார்ந்த கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த காமுகன் சதீஷ் (வயது 32), சிறுமியை அருகேயிருக்கும் விவசாய நிலத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் பயந்துபோன சிறுமி அலறவே, அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பாலியல் பலாத்கார முயற்சியில் காமுகனின் கொடூரத்தால் சிறுமி காயமடைந்து இருந்த நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பாட்டி வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சதீஷ் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியாகி வந்துள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruvannamalai Vandavasi Child Sexual Torture Case Culprit Arrest 27 April 2021