திருவண்ணாமலை: இனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பச்சிளம் பலியான பரிதாபம்.. பொம்மையை வைத்து கதறிய தாய்.!
Tiruvannamalai two Children Died Eating Sweets Police Investigation
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் நரசிங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பாஞ்சாலி. இந்த தம்பதிக்கு தர்ஷினி என்ற 6 வயது மகளும், ஹரி என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி பழனியின் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர், இனிப்பு பலகாரங்களை வாங்கி வந்த நிலையில், குழந்தைகள் இருவரும் இனிப்பு பலகாரங்களை விரும்பி சாப்பிட்டுள்ளனர். இந்த இனிப்பை சாப்பிட்ட பின்னர் முதலில் தர்ஷினி மயக்கமடையவே, சிறுமியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிறுமி உயிரிழந்துள்ளார். அன்றைய தினம் இரவே ஹரியும் மயங்கி விழுந்த நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி ஹரியும் உயிரிழந்துள்ளார்.
அடுத்தடுத்து தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி துடித்தது, காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாகியது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தரமற்ற இனிப்பு பலகாரம் விஷமாக மாறி குழந்தையை இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் குழந்தைகளின் உடலை பிரேதப் அனுப்பி வைத்த நிலையில், இந்த அறிக்கை வந்தவுடன் தகுந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மனவேதனையுடன் குழந்தைகளின் இறப்பை ஏற்றுக்கொள்ளாமல், குழந்தைகள் விளையாடிய பொம்மையை மடியில் வைத்து தாய் கொஞ்சி விளையாடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai two Children Died Eating Sweets Police Investigation