ஒரேயொரு குடும்பம் முன்னேற திமுக கட்சியை அண்ணா தொடங்கினாரா? - மரு. அன்புமணி இராமதாஸ் கேள்வி.! - Seithipunal
Seithipunal


கலைஞர் குடும்பம் மட்டும் முன்னேற அண்ணா கட்சி தொடங்கினாரா? என்று மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா தமிழக முன்னேற வேண்டும், தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்று கட்சியை தொடங்கினர். இன்று கலைஞரின் குடும்பம் மட்டும் தான் முன்னேறியுள்ளது. கலைஞர் குடும்பம் மட்டும் முன்னேற அண்ணா கட்சி தொடங்கினாரா?. திமுக குடும்ப கம்பெனியில் வெறும் நிதி தான். கருணாநிதி, உதயநிதி, இன்னும் பல நிதிகள். 

ஒரு நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் பேசுகிறார், " அந்த காலத்தில் பானை ஓலையில் எழுதிவைப்பார்கள் " என்று பேசுகிறார். பனை ஓலையில் எழுதி வைப்பார்கள் என்று சொல்வதற்கு பதிலாக உளறுகிறார். 14 ஆயிரம் கோடியில் 5 ஆயிரம் கோடியை கழித்தால், மீதி 7 கோடி வரும் என்பது மு.க ஸ்டாலின் கணக்கு. அந்த அளவிற்கு அவர் கணக்கில் புலி. சட்டசபையில் சட்டையை கிழித்து பனியன் விளம்பரத்தை கொடுத்ததை தவிர, வேறென்ன மு.க ஸ்டாலின் செய்துள்ளார். 

திமுக பெண்களுக்கு எதிரான கட்சி. பெண்மைக்கு எதிரான கட்சி. திமுக கூட்டணி மற்றும் திமுகவின் வரலாறுகள் அப்படிப்பட்டது. பெண்களை தெய்வமாக வணங்கும் இந்த மண்ணில், பெண்கள் குறித்து திமுகவின் அவதூறாக பேசுகிறார். தாயை பற்றி கொச்சையாக பேச, ஆ.ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?. இதனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai PMK Anbumani Ramadoss Speech 2 April 2021 about DMK Family Party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->