மு.க ஸ்டாலின் கனவு நிறைவேறுமா?. என் தம்பி விட்டுடுவாங்களா - மருத்துவர் அன்புமணி சூளுரை.! - Seithipunal
Seithipunal


முதல்வராக வேண்டும் என்று மு.க ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். அது நடக்காது. எனது தம்பிகள் அதற்கு விடமாட்டார்கள் என்று மருத்துவர் இராமதாஸ் பேசினார்.

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " 

70 வருடத்திற்கு பின்னர் தமிழக முதல்வராக பதவிவேற்றுள்ள விவசாயி எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும். மு.க ஸ்டாலின் அரசியல் வியாபாரி. இந்த தேர்தல் விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கு இடையே நடைபெறும் தேர்தல். திமுகவில் பெரும் முதலாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பவர்கள். 

எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று மு.க ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். அது நடக்காது. எனது தம்பிகள் அதற்கு விடமாட்டார்கள். மு.க ஸ்டாலினுக்கு கலைஞரின் மகன் என்ற பெரிய தகுதி இருக்கிறது. 

40 வருட மருத்துவர் இராமதாஸின் தியாகத்தால், முதற்கட்ட வெற்றியாக பின்தங்கிய நமது சமூகத்திற்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதனைப்போன்று, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கானது பெற்றுத்தரப்படும். சமூக நீதி என்பது பின்தங்கிய சமூகங்கள் முன்னிற்கு வருவது. அது கட்டாயம் நடக்கும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai PMK Anbumani Ramadoss 2 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->