அடேய்களா?.. என்னடா இப்படியெல்லாம் களமிறங்கிடீங்க.. கருவளையம் சரியாக பாம்பு மசாஜா?..!
Tiruvannamalai man using snake and cure eye Karuvalayam
முகம் மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் பரு, தேமல், கண்களில் உள்ள கருவளையம் போன்றவற்றை நீக்கி புதுப்பொலிவு தோற்றம் பெற வேண்டும் என்பதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பாகுபாடு இல்லாமல் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
பலரும் அழகு சாதன பொருட்களை உபயோகம் செய்தும் அழகு பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியை சார்ந்த பாம்பாட்டி குமரேசன். இவர் திருபுவனை பகுதியில் முகாமிட்டு, அங்குள்ள கிராமங்களில் தனது வியாபார யுக்தியை உபயோகம் செய்துள்ளார்.
இதற்கு தன்னிடம் உள்ள விஷ பாம்பை முகத்தில் உள்ள கருவளையத்தில் வைத்து தேய்த்தால், அது இருக்கும் இடம் இல்லாமல் போய்விடும் என்று சிகிச்சை அளித்துள்ளார். இந்த சிகிச்சைக்கு ரூ.100 கட்டணமாகவும் பெற்றுக்கொண்ட நிலையில், இதனைக்கேட்ட பலரும் தலைதெறிக்க ஓடியுள்ளார். இதில் பெரும் உச்சகட்டமாக மஞ்சள் கரு கலந்த மருந்தை கொடுத்து, அதனை முகத்தில் தேய்த்துவர சொல்லி பாம்பை வைத்து வித்தை காண்பித்தது தான் பெரும் அதிர்ச்சியே...
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai man using snake and cure eye Karuvalayam