சிங்கிள்ஸ் வயிறெரிய, தி.மலையில் டூ வீலரில் ஜோடியாக வளம்வந்த காதல் ஜோடி தனிமை மையத்தில் சேர்ப்பு.!!
Tiruvannamalai love couple under quarantine due to fake E pass
கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த வாலிபர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நேரத்தில், திருவண்ணாமலை பகுதியை சார்ந்த பெண்மணியின் பழக்கம் ஏற்படவே, இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து பின்னாளில் காதலில் விழுந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கால் காதல் ஜோடிகள் சந்தித்துக்கொள்ள இயலாது தவித்து வந்துள்ளது.
இந்த நிலையில், வாலிபர் இ-பாஸ் பெறாமல் எப்படியோ மாற்று பாதைகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 தினமாக காதல் ஜோடிகள் கொண்டாட்டத்தில் பல பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.
இந்த காதல் ஜோடியின் விவகாரம் காவல் துறையினருக்கு தெரியவரவே, சுகாதாரத்துறையினரை பி.பி.இ உடையுடன் அருகில் வைத்து, காதல் ஜோடியை தேடி கண்டறிந்துள்ளனர். பின்னர் இருவரையும் அலேக்காக தூக்கி அங்குள்ள சிறப்பு முகாமிற்கு அனுப்பி கொரோனா பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காதல் ஜோடியிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai love couple under quarantine due to fake E pass