திருவண்ணாமலையை சார்ந்த இராணுவ வீரர் பஞ்சாப்பில் உயிரிழப்பு.. சோகத்தில் கிராமம்.!! - Seithipunal
Seithipunal


கண்ணமங்கலத்தை சார்ந்த இராணுவ வீரர், பஞ்சாபில் நடைபெற்ற விபத்தில் மரணமடைந்துள்ள சோகம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் ரங்கநாத உடையார் குப்பம் பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவரது மனைவி அமுதா (வயது 32). ஆறுமுகம் பஞ்சாப் மாநிலத்தில் கோர் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படை பிரிவில் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். 

தம்பதிகள் இருவருக்கும் தற்போது வரை குழந்தைகள் இல்லாத நிலையில், ஆறுமுகம் தற்போது பஞ்சாபில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இராஜஸ்தான் மாநிலத்திற்கு பயிற்சிக்காக இராணுவ வாகனத்தில் பிற இராணுவ வீரர்களுடன் சென்றுள்ளார். 

இதன்போது, எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் கண்ணமங்கலத்தில் இருக்கும் ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை அறிந்த ஆறுமுகத்தின் மனைவி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவரது உடல் இன்று மாலை விமானம் வாயிலாக கொண்டு வரப்பட்டு, நாளை இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரியவருகிறது.

தனது தாய் நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் கொண்ட ஆறுமுகம், 18 வயதிலேயே இரன்டுவதில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். தற்போது, அவரது 37 வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இதனால் அவரது சொந்த கிராமமே சோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், விடுமுறைக்கு ஊருக்கு வரும் ஆறுமுகம் அனைவரோடும் அன்பாக பழக கூடிய குணமுள்ள, அமைதியான நபர் என்றும் கிராமத்தினர் மற்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Kannamangalam Army Officer Aarumugam Passed Away Accident in Punjab


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->