முறையற்ற பழக்கம்... மிளகாய்ப்பொடி தூவிய கணவன்.. அரங்கேறிய கொடூரம்.!!
Tiruvannamalai husband murder attempt to wife due to affair
ஆரணி அருகே மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஜெயந்தி.
இவர்கள் இருவரும் கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், இவர்களை இடைமறித்த இரண்டு பேர் மிளகாய் பொடியை தூவி, ஜெயந்தியை மட்டும் கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவின் கீழ் விசாரணை செய்து வந்த காவல்துறையினர், 2 பேர் ஜெயந்தியை மட்டும் கொலை செய்ய காரணம் என்ன? என்பது குறித்து சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தோஷத்திற்கு சென்னையை சேர்ந்த பெண்ணுடன் முறையற்ற பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் சந்தோஷ் இருந்துள்ளார்.
மேலும், சந்தோஷின் முறையற்ற பழக்கம் ஜெயந்திக்கு தெரியவந்த நிலையில், இது குறித்து கணவரை ஜெயந்தி கண்டித்துள்ளார். இதனால் மனைவியை கொலை செய்ய முயற்சித்தது அம்பலமாகியுள்ளது.
மனைவியை கொலை செய்ய ரூ.ஒரு லட்சம் செலவில் கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கணவர் சந்தோஷை கைது செய்த காவல்துறையினர், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கூலிப்படையை சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai husband murder attempt to wife due to affair