திருவண்ணாமலை பெண்மணி மர்ம மரணம் விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்.. வட்டாட்சியர் முன்னிலையில் சரணடைந்த கொலையாளி.!
Tiruvannamalai girl sexual abuse Murder Mystery Police arrest culprit
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் வேலன்தாங்கல் பகுதியை சார்ந்தவர் லட்சுமி (வயது 49). இவர் கணவரை இழந்து, தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதியின் போது அங்குள்ள ரகுநாதசமுத்திரம் அருகேயுள்ள வயலில் காற்றுப்பன்றி தொல்லையை தடுக்க தோட்டக்காவலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பாத நிலையில், இவரை தேடி அலைந்த போது கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து லட்சுமியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் லட்சுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் அப்பகுதியை சார்ந்த நடராஜன் (வயது 36) என்பவரை சந்தேகத்தின் கீழ் பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் கொலை செய்யவில்லை என்று உறுதிபட தெரிவித்த நிலையில், பிற தடயமும் கிடைக்காததால் நடராஜனை காவல் துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்போது நடராஜன் ரெட்டிக்குப்பம் வட்டாட்சியரிடம் சரணடைந்து, லட்சுமியை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதன்பேரில் காவல் துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று வயல் வெளியில் பெண்மணி தனியாக இருந்த நிலையில், அவரை மது போதையில் இருந்த நான் உல்லாசத்திற்கு அழைத்தேன் என்றும், அவர் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடராஜனை காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai girl sexual abuse Murder Mystery Police arrest culprit