சொந்த பேத்தியை சீரழித்து, கர்ப்பிணியாக்கிய காமுகன்.. சிக்கலில் சிக்கிய குடும்பம்.!!
Tiruvannamalai child sexual abuse by grand fa police arrest culprit
திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய அவரது தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வருபவர் துரை.
இவருக்கு 15 வயது பேத்தி இருக்கிறார். துரைக்கு தற்போது 65 வயதாகும் நிலையில், தனது 15 வயது பேத்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ள நிலையில், இது குறித்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் தனியார் மருத்துவமனை மூலமாக கருக்கலைப்பு செய்து உள்ளனர். இந்த நிலையில், கருக்கலைப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பிய சில நாட்களுக்குள்ளாகவே மீண்டும் சிறுமியை காமுக வயோதிகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனையடுத்து பெற்றோர்கள் இதுகுறித்து அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுமியின் தாத்தா துரையை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், 15 வயது சிறுமிக்கு முதலில் ஏற்பட்ட கர்ப்பம் குறித்த தகவலும் விசாரணையில் வெளிவந்ததால், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை ஊழியர் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai child sexual abuse by grand fa police arrest culprit