ஆசைவார்த்தை கூறி அத்துமீறிய காமுகன்.. 5 மாத கர்ப்பிணியாக 15 வயது சிறுமி..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது கொரோனா தடுப்பு நவடிக்கைகள் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் சிறுமி வீட்டில் இருந்து வந்த நிலையில், பெற்றோர்கள் பணிக்கு சென்றதும் சிறுமி தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள தண்டராம்பட்டு அருகேயுள்ள தானிப்பாடி பகுதியை சார்ந்த மாணவியின் உறவினர் கணேசன் (வயது 23) என்பவன், அடிக்கடி இல்லத்திற்கு வந்து சென்றுள்ளான். 

இதன்போது, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது ஆசைக்கு இணங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். காமுகனின் காதல் வலையில் விழுந்திருந்த சிறுமியும், பெற்றோரிடம் எதையும் தெரிவிக்காமல் மறைத்து இருந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, சிறுமியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகவே, பின்னர் சிறுயிடம் பெற்றோர்கள் விசாரித்த போது உண்மை தெரியவந்துள்ளது. மேலும், ஆசை வார்த்தை கூறி காமுகன் பலமுறை சிறுமியிடம் அத்துமீறியுள்ளான். இதனையடுத்து சிறுமியின் தாயார் தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, கணேசனை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Child Sexual abuse 5 Month Pregnant by Relation 11 December 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->