சினிமா பாணியில் இறுதி நொடியில் நின்ற திருமணம்.. மணமக்கள் கண்ணீர்..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியை சார்ந்த 17 வயது சிறுமிக்கும், செய்யார் அருகேயுள்ள முணுகப்பட்டு பகுதியை சார்ந்த நபருக்கும் கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து புறப்பட்டு, அக்கோவிலுக்கு சென்றுள்ளனர். 

கோவிலுக்கு வெளியே திருமண ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அப்பெண்ணிற்கு 17 வயதே ஆவதும் உறுதியானது. பின்னர் கோவிலுக்குள் சென்று பார்க்கையில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணாக சிறுமியும் மணமேடையில் அமர்ந்துள்ளனர். 

திருமண நேரமும் நெருங்கியதால் மணமகன் தாலிகட்ட முயற்சிக்கவே, அதிகாரிகள் திரைப்பட பாணியில் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பு வீட்டாரும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டு, பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

மேலும், திருமண வயது நிரம்பாத பெண்மணிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என்று அதிகாரிகள் அறிவுரை கூறிய நிலையில், சிறுமியை மீட்ட அதிகாரிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருந்த போதிலும், அவருக்கு திருமண வயது இன்னும் ஆகவில்லை என்பதால், அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai child marriage stopped by Child Line Officers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->