மின்னல் தாக்கி 11 ஆம் வகுப்பு மாணவி பலி.. செங்கம் அருகே சோகம்.!
Tiruvannamalai Chengam woman Died Lighting Attack 5 April 2021
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் ஓமுடி கிராமத்தை சார்ந்தவர் மீரா (வயது 16). சிறுமி மீரா அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று சிறுமி தனது வயல்வெளிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கோடை வெயில் காரணமாக காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்வது போல மேகங்கள் சூழ்ந்தது. இதன்போது திடீரென மின்னலும் நிலத்தை தாக்கியுள்ளது.
இந்த நிகழ்வின் போது சிறுமி இருந்த இடத்திற்கு அருகே மின்னல் தாக்கிய நிலையில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruvannamalai Chengam woman Died Lighting Attack 5 April 2021