போராடி ஜெயித்த அதிமுக.. ஆரணியில் நடந்த சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. இந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகை கடந்த 6 ஆம் தேதி அகற்றப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பான தகவல் சமூக வலைதங்களில் வெளியான நிலையில், அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அம்மா உணவக பெயர் பலகை ஆளும் கட்சியான திமுகவினரால் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர். 

இதனையடுத்து, இந்த விஷயம் ஆரணி நகராட்சி நிர்வாகத்திற்கு செல்லவே, அம்மா உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அங்கேயே வைத்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் உள்ள ஜெ.ஜெ நகர் அம்மா உணவகம் திமுக ஆதரவாளர்களால் சூறையாடப்பட்ட விவகாரத்தில், திமுகவினர் இருவரும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani Amma Unavagam Poster Fixed at Removed Place 9 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->