லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.. அரங்கேறிய சோகம்.!!
Tiruvannamalai Accident 2 women died
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்ன கோட்டான்கல் கிராமத்தை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவியின் பெயர் மணவார்த்தாள் (வயது 50). இவரது மகன் சசிகுமார் (வயது 29). இவர் திருவண்ணாமலையில் இருக்கும் சித்தா மெடிக்கல் கடையில் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் மணவார்த்தாள் மற்றும் அவருடன் கூலித்தொழில் செய்து வரும் சத்தியா (வயது 35) என்ற பெண்மணியுடன் பணிக்கு செல்ல, சசிகுமாருடன் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை நோக்கி பயணம் செய்துள்ளனர்.
இதில், செங்கம் அருகேயுள்ள பகுதிக்கு வந்துகொண்டு இருக்கையில், லாரியொன்று திடீரென இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. வாகனத்தில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்துள்ளார். மேலும், லாரியின் பின்பக்க டயரில் மணவார்த்தாள் மற்றும் சத்தியா விழுந்ததை அடுத்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சசிகுமார் மட்டும் சிறிய அளவு காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குஜராத் மாநிலத்தை சார்ந்த ராஜாராம் (வயது 42) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai Accident 2 women died