அதிர்ச்சி..! திருவண்ணாமலையில் 14 குழந்தைகள் திருமணம் ஒரேநாளில் தடுத்து நிறுத்தம்..!
Tiruvannamalai 14 Child Marriage Stooped by Child Line Officers in Single Day
குழந்தைகள் திருமணம் என்பது இன்றளவும் தொடர்ந்து நடைபெறுவது வருத்தமான விஷயம் தான். ஆனால், அந்த குழந்தை திருமணத்திற்கு பின்னணியில் இருக்கும் மூலகாரணத்தை கண்டறிந்து, அதனை சரி செய்து கொடுக்கும் நடவடிக்கையில் அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ ஈடுபட்டு வருவதாக எந்த விதமான தகவலும் இல்லை.
எந்த செய்தியை எடுத்தாலும் பாலியல் பலாத்காரம், நாடகக்காதல் வலை என சிறுமிகளின் வாழ்க்கை ஒருபுறம் சீரழிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோரின் பிள்ளைகள் எதிர்காலம் குறித்த பயம் மற்றும் பொருளாதார சூழ்நிலை என்று பல காரணத்தால் குழந்தைகள் திருமணம் நடைபெற்றுவதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் திருமணத்தின் காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி வரும் நாட்களிலாவது குழந்தைகள் திருமணம் என்ற பிரச்சனை இல்லாமல் செல்லும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் பகுதியில் நேற்று அதிகளவு முகூர்த்தங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், திருமணங்களில் பெரும்பாலானவை குழந்தைகள் திருமணம் என குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் உதவியுடன் குழந்தைகள் நல அதிகாரிகள் சென்று விசாரணை செய்கையில், 14 குழந்தைகள் திருமணம் நடைபெற்றது உறுதியானது.
இதனையடுத்து மணப்பெண்ணாக இருந்த 14 சிறுமிகளின் திருமணமும் நிறுத்தப்பட்ட நிலையில், பெற்றோர்களிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 9 பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தினர். திருமணத்தை நிறுத்த மனமில்லாத பெற்றோரின் 5 குழந்தைகள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai 14 Child Marriage Stooped by Child Line Officers in Single Day