புதுமண பெண் அடித்தே கொலை?.. பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கண்ணீர் புகார்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டியை அடுத்துள்ள பாதிரிவேடு பகுதியை சார்ந்தவர் கார்த்திக் (வயது 33). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இதே பகுதியை சார்ந்த சேகர் என்பவரின் மகளான சுனிதா (வயது 28) என்பவருக்கும், கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக திருமணம் முடிந்தது. 

இந்த சமயத்தில், நேற்று முன்தினத்தின் போது சுனிதா வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சுனிதாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான குடும்பத்தினர் கார்த்திக்கின் இல்லத்திற்கு சென்று பார்க்கையில், சுனிதாவின் உடல் கயிற்றில் இருந்து கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், சுனிதாவின் தலையில் இரத்த காயம் இருந்துள்ளது.

இதனையடுத்து சுனிதாவின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில், சுனிதாவிற்கும், கார்த்திக்கிற்கும் கடந்த 2019 செப்டம்பர் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு சீர்வரிசை செய்தேன். திருமணம் முடிந்த முதல் வாரத்தின் துவக்கத்திலேயே வரதட்சணை பணம் கேட்டு கார்த்திக்கின் குடும்பத்தினர் கொடுமை செய்தனர். 

பின்னர் எங்களின் வீட்டிற்க்கே மீண்டும் அனுப்பி வைத்தனர். சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்த நிலையில், மீண்டும் கார்த்திக் மற்றும் அவரின் குடும்பத்தினர் சண்டையிட்டு வந்தனர். எனது மகளின் இறப்பில் மர்மம் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvallur girl killed by husband and his family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->