துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை... நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் பெண்ணின் செயல்..!! வைரல் வீடியோ காட்சிகள்.!!
Tirupur girl thanks to sanitation worker
கரோனாவின் தாக்கத்தால் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பணிகள் முடங்கினாலும், அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்து வரும் துப்புரவு பணியாளர்கள் தங்களின் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
துப்புரவு பணியாளர்களின் பணி குறித்து பெருமையாக பேசி வந்தாலும், அவர்களிடம் நேரில் சென்று யாரும் பேசுவது இல்லை. இந்த நிலையில், துப்புரவு பணியாளர்களின் கால்களுக்கு பாத பூஜை செய்து பெண்மணி தனது மனிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியை சார்ந்த பெண்மணி வசந்தா (வயது 48). இவர் பல்லடம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று வழக்கம்போல அங்குள்ள கணபதி நகர் 14 ஆவது வார்டுக்கு சென்று குப்பைகளை வீடு வீடாக சேகரித்துக்கொண்டு இருந்த நிலையில், அப்பகுதியை சார்ந்த புஷ்பா என்ற பெண்மணியின் இல்லத்தில் இருந்த குப்பைகளை கேட்டுள்ளார். கொஞ்சம் பொறுக்க சொல்லிய புஷ்பா, தனது மகளுடன் தாம்புளத்தட்டை எடுத்து வந்துள்ளார். குப்பை எங்கே? தட்டை எடுத்து வந்துள்ளீர்கள் என்று வினவியுள்ளார்.
ஒரு தாம்பூலத்தட்டில் பட்டுபுடவையும், மற்றொன்றில் பூ மற்றும் குங்குமம், சந்தானம் இருந்துள்ளது. புஷ்பாவின் மகளான அம்மு தனது கைகளில் ஸ்ரீரவிசங்கர் புகைப்படத்தை வைத்து நிற்கவே, வாகனத்திற்கு முன்புறம் நிற்க வைத்து பாதத்தை நீரில் கழுவி குங்குமம் மற்றும் சந்தானம் ஆகியவற்றை வைத்து பூக்களை தூவி பாத பூஜை செய்துள்ளார். மேலும், துப்புரவு பணியாளரின் கழுத்தில் ரூ.10 மாலையும், மலர் மாலையையும் அணிவித்து, நெற்றியில் சந்தானம் குங்குமம் இட்டு மரியாதை செலுத்தினர்.
இதுமட்டுமல்லாது பட்டுபுடவையையும் வழங்கவே, அனைத்தையும் பெற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர் நடப்பது கனவா? நனவா என்ற அதிர்ச்சியில் சில மணித்துளிகளை உறைந்துபோயிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே, இது பலரது பாராட்டை பெற்றுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirupur girl thanks to sanitation worker