திருப்பூர் சிறுமி நாடகக்காதலால் ஏமாற்றப்பட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு.. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 25). இவன் காங்கேயம் பகுதியை சார்ந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளான். இந்த நேரத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ள நிலையில், சிறுமி வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் வேல்முருகன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளான். 

இதன்பின்னர் சிறுமி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மனவருத்ததில் இருந்து வந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்து டிசம்பர் மாதத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். 

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக காங்கேயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வேல்முருகனை கைது செய்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த சமயத்தில், திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வேல்முருகனின் மீது குண்டர் சட்டம் பாய்வதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வேல்முருகனின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur girl sucide due to drama love police put gundar act for culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->