விளையாட்டில் தகராறு... நியாயம் கேட்ட பெண் அடித்து கொலை.. திருப்பூரில் பரபரப்பு..!!
Tiruppur women murder police investigation
திருப்பூரில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான பிரச்சனையில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செவ்வண்டம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள பாரதி நகர் மற்றும் வடக்கு பாளையம் பகுதி இளைஞர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல மைதானத்தில் கிரிக்கெட் விளையாண்டு கொண்டு இருந்த சமயத்தில், இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறி, ஒருவருக்கொருவர் தாக்கியுள்ளனர். இந்த மோதலில் பாரதி நகர் பகுதியை சார்ந்த இளைஞர் காயமடைந்து இருந்துள்ளார். இந்த இளைஞரின் தாய் வடக்கம்பாளையம் பகுதிக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.
இதில் வடக்கம்பாளையம் பகுதியில் தகராறு ஏற்பட்டு தாக்குதல் அரங்கேறிய நிலையில், பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur women murder police investigation