இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கணவனை உயிருடன் கொளுத்திய மனைவி.. விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்.!
Tiruppur Wife Mercy Murder Husband want Insurance Money as per Husband Advice 10 April 2021
கடன் நெருக்கடியால் கால் முறிந்த கணவனை ஆம்னி வேனில் வைத்து உயிரோடு எரித்துக் கொலை செய்த மனைவி, ரூபாய் மூன்று கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கொலை சம்பவத்தை நடத்திய பயங்கரம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துடுப்பத்தி பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ரங்கராஜன். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் முறிவு ஏற்பட்டு, கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
உடல்நிலை ஓரளவு குணமடைந்த நிலையில், வீட்டில் ஓய்வு எடுப்பதாக கூறி அவரது மனைவி ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜா ஆகியோர் திங்கட்கிழமை இரவு கோவையில் இருந்து துடுப்பதிக்கு ஆம்னி காரில் அழைத்து வந்துள்ளனர்.
வீட்டுக்கு செல்லும் வழியில் பெருமாநல்லூர் பகுதியில் காரை நிறுத்திய ஓட்டுநர் சிறுநீர் கழிக்க சென்றுவிட்ட நிலையில், கீழே இறங்கிச் சென்று மீண்டும் வாகனத்தை இயக்குகையில் கார் தீப்பிடித்துள்ளது. ரங்கராஜனை காப்பாற்ற முயன்றும், அவரை மீட்க முடியாமல் காருடன் எரிந்து இறந்துவிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணையில், இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில், ரங்கராஜ் தனது சொந்த ஊரான திருப்பதியில் ரூபாய் 65 லட்சம் மதிப்பிலான புதிய வீடொன்றை கட்டிய நிலையில், வீடு கட்டுவதற்காக தெரிந்தவர்களிடம் ஒன்றரை கோடி அளவில் கடன் வாங்கியுள்ளார்.
இதனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். ரங்கராஜன் மனைவியிடம் கடன் தொல்லை அதிகமாக இருப்பதால், நீ என்னை காருடன் தீ கொளுத்திவிட்டு விபத்து போல கூறி, இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிய கடனை அடைத்து விடுமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கணவரின் பேச்சைக் கேட்டு அவரது விருப்பப்படியே மயக்க மருந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதற்கு உதவியாக உறவினர் ராஜாவும் இருந்துள்ளார். ராஜாவிடம் விசாரிக்கையில், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் ஜோதிமணி கொடுப்பதாக கூறியதால், இந்த கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரங்கராஜன் மகன்கள் இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் ஷேர் மார்க்கெட் தொழிலிளும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur Wife Mercy Murder Husband want Insurance Money as per Husband Advice 10 April 2021