ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் வார்டு உறுப்பினர்.. திருப்பூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவியாக செல்வி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவருக்கும், ஆறாவது வார்டு உறுப்பினர் குப்புசாமி என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வைத்துள்ளது. 

இந்நிலையில், குப்புசாமி தன்னை சாதி பேர் கூறி அவதூறாக பேசிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக தாராபுரம் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், குப்புசாமியின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவருகிறது. 

இந்த சூழ்நிலையில், குப்புசாமியின் ஆதரவாளரான பொள்ளாச்சியை சார்ந்த தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன் என்பவரின் இல்லத்திற்கு செல்வி மற்றும் அவரது கணவர் ரமேஷ் சென்றுள்ளனர். பின்னர் கோபாலகிருஷ்ணன் இல்லத்திற்கு முன்னர் செல்வி மற்றும் ரமேஷ் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணையை வாங்கி வைத்துக்கொண்டனர்.

இதில் செல்வி திடீரென மயங்கி விழவே, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மருத்துவமனைக்கு விரைந்து சென்று செல்வியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், குப்புசாமியின் மீது வழங்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் பெற கோபாலகிருஷ்ணன் தரப்பில் மிரட்டி வருவதாகவும், இதனால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து வாக்குமூலத்தை பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur village Leader suicide attempt due to torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->