கடனுக்கு சரக்கு கேட்டு காங்கிரஸ் நிர்வாகி போர்க்கொடி.. ஆளும் கூட்டணி கட்சிக்காரன் என அறைகூவல்.!
Tiruppur Tasmac Congress Supporter Fight for Loan Drinks
மதுபான கடையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் கடனுக்கு சரக்கு கேட்டு, நாங்க ஆளுங்கட்சி என மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபானக்கடைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் ஜெகன், கடனுக்கு மதுபானம் கேட்டு இருக்கிறார்.
தன்னை காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் என அறிமுகம் செய்துகொண்ட ஜெகன், கடனாக மதுபானம் தரக்கூறி மதுபான கடை ஊழியரிடம் கோரிக்கை வைக்கவே, சிறிது நேரத்தில் வந்து பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுபானக்கடையில் பணியில் இருந்த ஊழியர் கடனுக்கு மதுபானம் வழங்க முடியாது, பணம் கொடுத்தால் தான் மதுபானம் வழங்கப்படும் என தெரிவிக்கவே, இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த ஜெகன் நான் ஆளுங்கட்சி கூட்டணியை சார்ந்தவன் என குரலை உயர்த்தியுள்ளார்.
இதனை மதுபானக்கடை ஊழியர் கண்டுகொள்ளாத நிலையில், காங்கிரஸ் கட்சிக்காரன் என்று தெரிந்ததுமே மதுபானம் வழங்க மறுக்கிறாய் அல்லவா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை குடிமகன் வீடியோவாக பதிவு செய்து வெளியிடவே, பெரும் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur Tasmac Congress Supporter Fight for Loan Drinks