புன்னகை மன்னன் பட பாணியில் பாறையில் குதிக்கச்சென்ற பள்ளி காதல் ஜோடி - காதலன் மட்டும் வீடு திரும்பிய சோகம்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படம் புன்னகை மன்னன் படத்தில் வரும் காதல் தற்கொலை சம்பவம் போல, திருப்பூர் பகுதியில் பள்ளி காதல் ஜோடி ஒன்று பாறையில் விழுந்து காதலி சாக, காதலன் மட்டும் வீடு திரும்பிய சோகம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் | அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வந்த மாணவி ஒருவருக்கும், அதே பகுதியில் வேறொரு பள்ளிகள் பயின்று வந்த மாணவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னால் அல்லது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. இதனை அடுத்து சிறுவன், சிறுமி இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு, சிறுமி அரசு மகளிர் விடுதியில் தங்க வைக்கப்பட்டார்.

விடுதியில் இருந்தே பள்ளிக்கு தினமும் சென்று வந்த சிறுமி, சம்பவம் நடந்த கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கும் செல்லாமல், விடுதிக்கும் திரும்பாமல் எங்கே சென்றார் என்று தெரியாமல், போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சிறுமையை காதலித்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமி தன்னுடன் வந்ததாகவும், பாறைக்குழியில் விழுந்து சிறுமி இறந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை ஏற்று பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur School Love issue crime


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->