உறவினர்களின் வற்புறுத்தல்..! குழந்தைகளை கொலை செய்து, தற்கொலைக்கு முயன்ற தாய்.!!
Tiruppur Palladam Woman Murder 2 Babies and she Suicide Attempt 29 April 2021
கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்மணி, இரண்டு குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்து கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக கணவன் - மனைவி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில், கணவனைப் பிரிந்த தமிழ்ச்செல்வி இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கணவனுடன் சேர்ந்து வாழுமாறு தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து போன தமிழ்ச்செல்வி, இரண்டு பிள்ளைகளுக்கும் எலி மருந்து கொடுத்து கொலை செய்து தானும் அதனை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில், இரண்டு குழந்தைகள் இறந்து விட்ட நிலையில், தற்கொலைக்கு முயற்சித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை மீட்டு அக்கம்பக்கத்தினர் அங்குள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur Palladam Woman Murder 2 Babies and she Suicide Attempt 29 April 2021