வீடுபுகுந்து பட்டப்பகலில் திருட்டு முயற்சி.. வடமாநில இளைஞரை வெளுத்தெடுத்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


வீடு புகுந்து திருட முயற்சித்த வடமாநில வாலிபரை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து காவல் அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் குணநங்கல்பாளையம் பகுதியில், அங்குள்ள குடியிருப்பில் நுழைந்த மர்ம நபரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். விசாரித்ததில், அவர் வடமாநில தொழிலாளி என்பது உறுதியாகவே, அவர் திருட வந்ததால் தர்ம அடி வழங்கப்பட்டது. 

பின்னர், கை, கால்களை கட்டிப்போட்டு பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளைஞரை மீட்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், திருட்டு முயற்சியில் ஈடுபட வந்திருந்த வாலிபர் அஸர் புல்லா (வயது 24) என்பது தெரியவந்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பர்காநா பகுதியை சார்ந்தவர் என்பதும், கடத்த சில மாதமாக பொள்ளாச்சியில் உள்ள கோகுல் ஹை பேஷன் என்ற பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தன்று, வேலையில் இருந்து நின்றுவிட்டு சின்னக்கரையருகே நண்பர்களை பார்க்க சென்ற போது, மதுபோதையில் குணநங்கல்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் திருட முயற்சித்தும் உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Palladam North Indian youngster Robbery Attempt Peoples Attacked and Hand Over Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->