குடும்ப தகராறில், ஒன்றரை வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை.. தாய் உயிர் ஊசல்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதியை சார்ந்தவர் இசக்கி ராஜா. இவர் பனியன் நிறுவன தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி செல்வி (வயது 24). இவர்கள் இருவருக்கும் ரித்தீஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. 

கணவன் - மனைவியிடையே நீண்ட காலமாகவே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனைப்போன்ற தகராறு நேற்றும் ஏற்பட்ட நிலையில், காலையில் இசக்கிராஜா பணிக்கு சென்றுள்ளார். வீட்டில் செல்வி மற்றும் அவரின் குழந்தைகள் இருந்துள்ளனர். 

இந்நிலையில், வீட்டிற்கு பால் ஊற்ற வரும் பால்காரர் இசக்கிராஜாவின் வீட்டிற்கு வருகை தருகையில், வாயில் நுரைதள்ளிய நிலையில் தாயும், மகனும் மயங்கியுள்ளதை கண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பால்காரர் பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் காவல்துறையினர் செல்வி மற்றும் அவரது குழந்தையை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவே, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரித்தீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பல்லடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சனையில் மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Palladam Mother Gives Poison to child baby and she suicide attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->