இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி.. 40 வயது காமுகனை நொறுக்கியெடுத்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 10 வயது சிறுமி, இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது, புதர்மறைவில் பதுங்கியிருந்த 40 வயது காமுகன், சிறுமியை வழிமறித்துள்ளார். 

இதன்போது பயந்துபோன சிறுமி சத்தம்போட முயற்சிக்கவே, சிறுமியின் வாயை பொத்தி புதருக்குள் தூக்கி சென்றுள்ளான். சிறுமிக்கு பின்னால் மற்றொரு சிறுமி வந்துகொண்டு இருக்கவே, முன்னாள் சென்ற சிறுமி மாயமானதால் அவரை தேடி பார்த்துள்ளார். 

அதன்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய காமுகன் முயற்சிப்பதை அறிந்து சத்தமிட்டுள்ளார். சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டுள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்த காமுகன் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளான். 

ஆனால், விடாத பொதுமக்கள் துரத்தி பிடித்து காமுகனை நையப்புடைத்தனர். இதனால் பலத்த காயமடைந்த காமுகன் மயங்கவே, காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காமுகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மருத்துவமனையில் காமுகனுக்கு சிகிச்சை செய்து அளிக்கப்பட்டு வரும் நிலையில், மயக்கம் தெளிந்ததும் விசாரணை நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அருகில் உள்ள கல் குவாரியில் பணியாற்றி வருபவனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Palladam girl sexual abuse attempt 40 Aged man Police Investigation 5 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->