3 வருடத்திற்கு பின்னர் கிணற்றுக்குள் இருந்து நாய் மீட்பு.. திருப்பூரில் நெகிழ்ச்சி நிகழ்வு.!
Tiruppur Palladam Dog Rescue From well After 3 Years 28 April 2021
பல்லடம் அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த நாய், மூன்று வருடங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் காமநாயக்கன்பாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கிணறு இருக்கிறது. இந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், கிணற்றுக்கு அருகே நாய் விளையாடுகையில் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்துள்ளது.
பொதுமக்கள் நாயை மீட்க முயற்சி எடுத்தும் தோல்வியடைந்த நிலையில், நாயை வளர்த்து வந்த கட்டிட தொழிலாளி வீட்டை காலி செய்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நாய் பசியால் கிணற்றுக்குள் இருந்து சத்தம் போடுகையில், அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் உணவு பொருட்களை போட்டு வந்துள்ளனர்.
இதற்குப் பின்னர் நாயை மீட்க இயலாமல் போன நிலையில், எப்போதாவது கிடைக்கும் உணவுகளை நாயும் சாப்பிட்டு சமாளித்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் விலங்குகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கிணற்றிலிருந்து வெளியே வந்ததும் முதலில் நாய்க்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. அந்த நாயை பொதுமக்கள் பலரும் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர்.
நாயை மீட்ட தீயணைப்பு துறையினருக்கும் மக்கள் மனதார பாராட்ட தெரிவித்த நிலையில், கடந்த மூன்று வருடத்தில் அப்பகுதியை சேர்ந்த யாராவது ஒருவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தால் நாய் முன்னதாகவே வெளியே வந்திருக்கும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur Palladam Dog Rescue From well After 3 Years 28 April 2021