ரீசார்ஜ் கடைக்குள் புகுந்த பேருந்து... அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்.. திருப்பூரில் சம்பவம்.!
Tiruppur Palladam Bus Accident Due to Rain Luckily Passengers Escaped Driver got Minor Injures
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து செல்போன் ரீஜார்ஜ் கடைக்குள் புகுந்து விபத்தில் சிக்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகேயுள்ள கொடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே, செல்போன் ரீசார்ஜ் கடை உள்ளது. இந்நிலையில், இன்று காலை குமுளியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து, கொடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே வந்துள்ளது.
இதன்போது, பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழக்கவே, அங்கிருந்த செல்போன் ரீசார்ஜ் கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், பேருந்தின் ஓட்டுநர் காயமடைந்தார்.
ஓட்டுனரின் சாமர்த்திய நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக அவிநாசிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவ இடத்தில் பெய்த மழையின் காரணமாக ஓட்டுனருக்கு சாலை சரியாக தெரியாத காரணத்தால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது தெரியவந்தது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur Palladam Bus Accident Due to Rain Luckily Passengers Escaped Driver got Minor Injures