வீரபத்ரகாளியம்மன் கோவிலின் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி கைது..!  - Seithipunal
Seithipunal


உண்டியல் பணத்தை திருடிவிட்டு பூசாரி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே. நகரில் உள்ள வீரபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இதில் பூசாரியாக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிலில் உள்ள உண்டியல் பணம் எண்ணப்பட்டது. அதில் 1 லட்சத்தி 50 ஆயிரம் பணம் எண்ணப்பட்டு மீண்டும் உண்டியலில் வைத்து பூட்டபட்டது.

இந்நிலையில், பூசாரி மணிகண்டன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதில் மர்ம நபர்கள் சிலர் கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் மற்றும் கோவிலில் உள்ள பல்வேறு பொருட்களை திருடி சென்றுவிட்டனர் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் மணிகண்டன் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மணிகண்டனே கோவில் நகைகளை திருடிவிட்டு நாடகமாடியது அம்பலாமனது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Padhra Kali Temple Money Robbery Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->