சொந்த மகனின் சூட்சம புத்தி.. கருணைக்கொலை செய்ய கண்ணீர் வடித்த பெற்றோர்கள்.!!
Tiruppur old age couple request to govt about Mercy Death
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ராயர்பாளையம் பகுதியை சார்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி கருணையம்மாள். இவர்கள் இருவரின் மகன் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக சென்னியப்பனிற்கு சொந்தமாக நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார்.
பின்னர் நிலத்தை பெற்றுக்கொண்ட மகன் தாய் - தந்தையை கவனிக்காமல் இருந்து வந்த நிலையில், வீட்டை விட்டும் வெளியேற்றியுள்ளார். இந்த விஷயம் குறித்து சென்னியப்பன் பல முறை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தம்பதிகள் இருவரும் தங்களை கருணை கொலை செய்ய கூறி மனு அளித்துள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur old age couple request to govt about Mercy Death