தொடர்கதையாகும் செல்போன் டவர் விபத்து.. கண்ணீரில் குடும்பத்தினர்.. திருப்பூரில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் அருகே, பராமரிப்பின்றி அலைபேசி டவர் இருந்தது. இந்த அலைபேசி டவர் சாலையில் திடீரென சரிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 

சாலையில் அவ்வழியாக சென்ற வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த ரங்கநாதபுரம் பகுதியை சார்ந்த செங்கிஸ்கான் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். 

மேலும், சாலையில் சென்று கொண்டு இருந்த மற்றொரு கார் மற்றும் லாரி விபத்திற்குள்ளான நிலையில், விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் செங்கிஸ்கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், திருப்பூரில் இந்த அவலம் தொடர்கதையாவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Mobile tower accident investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->